Skip to content
Tamil Book Club

Upcoming meeting

ஏப்ரல் சந்திப்பு: புத்தக கலந்துரையாடல், ஜெயமோகன், சங்க பாடல்கள்

Meeting notes, reading progress, and the conversation threads we want to bring into the room.

Description

நாம் சங்க இலக்கியத்தை பள்ளிப்பாடமாக மனப்பாடம் செய்கிறோம். கோயில் சிலைகளைப் போல இருட்டில் வைத்து வழிபடுகிறோம். அல்லது ஏதோ தொல்பொருள் போல சுரண்டிச் சுரண்டி ஆய்வு செய்கிறோம். கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது. வாழ்வை விரிவுபடுத்துவது. வாழ்வை வைத்துத் தான் கவிதையை வாசிக்க வேண்டும்.

சென்ற மாத சந்திப்பில் ஐம்பெருங்காப்பியங்கள் பற்றி சிலர் உரையாடினோம்.

சங்க இலக்கியங்களை வாசிப்பது அவ்வளவு எளிதானதல்ல. ஒருமுறையில் வாசித்து முடித்துவிடக்கூடியதுமல்ல. வாசிப்பில், மீள்வாசிப்பில் விரித்தெடுத்துக்கொள்ள ஏராளமான உவமைகள் உள்ளன.

இவற்றுக்கான உத்திகள் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு வழிமுறை, கருத்துகள் இருக்கும். அது பற்றி குழுவில் உரையாடலாம்.

இந்த மாத வாசிப்புக்கான புத்தகமாக சங்க சித்திரங்களை தேர்ந்தெடுக்க இதுவும் ஒரு காரணம்.

நற்றிணை, கலித்தொகை, குறுந்தொகை, புறநானூறு இவற்றிலிருந்து 40 கவிதைகளை தேர்ந்தெடுத்து ஜெயமோகன் விளக்குகிறார். அதனுடன், கவிதையை கவிதையாய் மொழிபெயர்ப்பு செய்வது போன்ற ஒன்றும் நிகழ்கிறது.

நாம் சங்க இலக்கியத்தை பள்ளிப்பாடமாக மனப்பாடம் செய்கிறோம். கோயில் சிலைகளைப் போல இருட்டில் வைத்து வழிபடுகிறோம். அல்லது ஏதோ தொல்பொருள் போல சுரண்டிச் சுரண்டி ஆய்வு செய்கிறோம். கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது. வாழ்வை விரிவுபடுத்துவது. வாழ்வை வைத்துத் தான் கவிதையை வாசிக்க வேண்டும். அப்படியொரு வாசிப்புக்கான இடத்தை இத்தொடர் சங்க இலக்கியங்களுக்கு அளிக்கிறது என்று பலர் குறிப்பிட்டார்கள். ஆகவே, இதைத் தமிழில் எழுத முடிவெடுத்தேன்.

Date
April 25, 2026
Time
16:30
Location
Google Meet
ஒருங்கிணைப்பு
Prakash

Agenda

  1. சங்க சித்திரங்கள் - உரையாடல்
  2. தங்களை ஆட்கொண்ட பாடல்
  3. தங்களை கவர்ந்த விளக்கம்
  4. ஐம்பெருங்காப்பியங்கள் - உரையாடல் தொடர்ச்சி
  5. வளையாபதி, குண்டலகேசி பற்றிய சிறு உரையாடல்.
  6. சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சீவக சிந்தாமணி பற்றி சென்ற முறை விடுபட்டவை

Reading progress

குறைந்த பட்சம் ஒரு பாடல் தேர்ந்தெடுத்து உரையாடுமாறு படிக்க வேண்டுகிறோம். பாடல்களில் உள்ள உவமைகள், மொழி, கண்ணோட்டம், உணர்வுகள் பற்றி பேசலாம்.